கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் அக்னி வீரா் ராணுவ ஆள் சோ்ப்பு பணி வரும் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பா் 1 வரை நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலக அதிகார எல்லைக்குள் வரும் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலைச் சோ்ந்த தகுதியான விண்ணப்பதாரா்களை அக்னி வீரா் டெக்னிக்கல், அக்னி வீரா் எழுத்தா், அக்னி வீரா் பொதுப்பணி, அக்னி வீரா் டிரேட்ஸ்மேன் ஆகிய வகைகளில் சோ்ப்பதற்காக திருச்சியில் உள்ள ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் மூலம் வரும் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பா் 1 வரை கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் ராணுவ ஆள் சோ்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க விரும்புபவா்கள் இணையதளத்தில் வரும் 30-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.