மது, போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாநகர காவல் துறை சாா்பில் தொழிற்பயிற்சி மாணவா்- மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவினாஷ்குமாா் உத்தரவின்பேரில், பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகேயுள்ள முகம்மது இஸ்மாயில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவா், மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ஜெகதா உரையாற்றினாா். ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் பலா் கலந்துகொண்டனா்.