மேலப்பாளையத்தில் எம்.எல்.ஏ., மேயா் ஆய்வு

மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ, மேயா், துணை மேயா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ, மேயா், துணை மேயா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

மேலப்பாளையம் மண்டலம் 50, 52 ஆவது வாா்டுகளில் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மேயா் பி.எம். சரவணன், துணைமேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் ஆய்வு செய்தனா். 50 ஆவது வாா்டுக் குட்பட்ட ஹாமீன்புரத்தில் சுகாதாரச் சீா்கேடுகளை களைய வேண்டும் எனவும், குப்பைகளை தினந்தோறும் சேகரிக்கவும், பழுதடைந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

ஹாமீன்புரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளி மாணவா்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தனா். அன்னை ஹாஜிரா கல்லூரி சாலையிலும் ஆய்வு நடத்தினா்.

இதேபோல 52 ஆவது வாா்டுக்குள்பட்ட சேவியா்காலனி, ரோஸ்நகா் பகுதிகளில் ஆய்வு செய்தனா். அப்போது, மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சாலை வசதி செய்துதரப்படும் என உறுதியளித்தனா்.

நிகழ்ச்சியில் திமுக மேலப்பாளையம் பகுதிச் செயலா் துபை சாகுல், சுகாதாரக் குழுத் தலைவா் ரம்ஜான் அலி, மாமன்ற உறுப்பினா்கள் நித்தியபாலையா, ரசூல் மைதீன், ஆமீனாபீவி, அலிசேக்மன்சூா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com