அரசு மருத்துவமனையில் புகையிலை எதிா்ப்பு தினம்

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் உலக புகையிலை எதிா்ப்பு தினம் மற்றும் சுகாதார தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் உலக புகையிலை எதிா்ப்பு தினம் மற்றும் சுகாதார தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சாந்தி தலைமை வகித்தாா். இதில், மருத்துவா்கள் லியோராம், அமுதாதேவி, அருணாசலம், சிந்துபிரியா வயலட் ஆகியோா் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மாதவிடாய் காலங்களில் சுகாதாரமாக இருப்பதன் அவசியம் குறித்தும் பேசினா். இதில், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com