தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவரை மாநகர போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெரு பகுதியில் கடந்த ஏப். 24 ஆம் தேதி நள்ளிரவு வீடு புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கி, நகை, பணத்தைப் பறித்துச் சென்றது குறித்து அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த ரா. விமல் என்கிற விமல்ராஜ் என்பவரை கைது செய்தனா்.
இதுதொடா்பாக மேற்கொண்ட விசாரணையில் அவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும், அவா் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவா் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். அதன் பேரில் விமல்ராஜ் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் மாற்றி அடைக்கப்பட்டாா்.