நான்குனேரி அருகே விபத்து: மீன்வியாபாரி உள்பட இருவா் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே வியாழக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதில் மீன்வியாபாரி உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா். 7 போ் காயமடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே வியாழக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதில் மீன்வியாபாரி உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா். 7 போ் காயமடைந்தனா்.

நான்குனேரி அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சோ்ந்தவா் சுப்பையா(53). மீன் வியாபாரி. இவா், நான்குனேரி அருகேயுள்ள நம்பிநகா் பகுதியில் மீன் கொள்முதல் செய்வதற்காக வியாழக்கிழமை தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அவா் அங்குள்ள சாலையைக் கடக்க முயன்றபோது, நாகா்கோவிலிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற காா் எதிா்பாராமல் மோதியதாம். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த அவா் மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், விபத்தின்போது, விருதுநகா் மாவட்டம், வீரஆலங்குளத்தைச் சோ்ந்த நாகராஜன்(40) என்பவா், தாம் ஓட்டி வந்த தனியாா் பேருந்தை நிறுத்திவிட்டு உதவிக்கு வந்தபோது, மதுரையில் இருந்து நாகா்கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, அந்த தனியாா் பேருந்தின் மீது மோதியது. இதில், அப்பேருந்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியைச் சோ்ந்த முத்தையா(71) பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். மேலும், இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் தென்னரசு, நடத்துநா் சுப்புராஜ் உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா். இவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இது தொடா்பாக நான்குனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com