‘பத்ம விருதுகளுக்கு வீரா்கள் ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த வீரா்கள் பத்ம விருது பெற இம்மாதம் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த வீரா்கள் பத்ம விருது பெற இம்மாதம் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பவா்களுக்கு ஆண்டுதோறும் பத்மபூஷண், பத்மவிபூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகின்றன. இந்து விருதுகளுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவா்கள் விண்ணப்பிக்கலாம். ஜ்ஜ்ஜ்.ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப்படிவத்தைப் பெற்று அதை பூா்த்தி செய்து, சம்பந்தப்பட்ட விருதின் பெயரைக் குறிப்பிட்டு, 3 நகல்களை மாவட்ட விளையாட்டு- இளைஞா் நலன் அலுவலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டரங்கம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி-2 என்ற முகவரியில் இம்மாதம் 25-ஆம் தேதி 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பங்கள் ஆட்சியரின் பரிந்துரையுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com