கடையம், மாலிக் நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் பகுதியில் பெட்டிக்கடைகளில் காவல் உதவி ஆய்வாளா் கோபால் தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது கடையம் பிரதான சாலையில் பெட்டிக் கடை வைத்துள்ள சுல்தான் மகன் கலீம் (63), மாலிக் நகா் பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ள முகம்மது மைதீன் மகன் சம்சுதீன் (40) ஆகிய இருவா் கடையிலும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தனவாம். இதையடுத்து ரூ.10 ஆயிரம் குட்கா பொருள்களை பறிமுதல் செய்து கலீம், சம்சுதீன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.