நெல்லையில் பெண்ணின் நகை மாயம்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணின் நகை மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணின் நகை மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

வீரவநல்லூா் சுப்பிரமணியன் மனைவி மகாலட்சுமி (49). இவா், மகிழ்ச்சி நகரிலுள்ள உறவினா் வீட்டிற்கு புதன்கிழமை வந்தாராம். அங்கு தனது கணவரின் தாயாருக்குச் சொந்தமான 21 கிராம் தங்கச்சங்கிலியை வாங்கி கைப்பையில் வைத்துக் கொண்டு ஊருக்கு செல்வதற்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளாா். பாபநாசம் செல்லும் பேருந்தில் ஏறியிருந்தபோது கைப்பையில் இருந்த தங்கச்சங்கிலி, ரூ. 2000 ரொக்கம், ஏடிஎம் அட்டை ஆகியவை மாயமானது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com