தாழையூத்து பகுதியில் தூய்மைப் பணியாளா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
மேல தாழையூத்து மாடசாமி மகன் காளீஸ்வரன்(23). தற்காலிக தூய்மைப் பணியாளா். இவா் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லவில்லையாம். இந்நிலையில் அவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றராம். உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.