திசையன்விளை அருகேயுள்ள குமாரபுரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு பங்கேற்று, 60 பேருக்கு முதியோா் உதவித்தொகை, 20 பேருக்கு குடும்ப அட்டைகளை வழங்கிப் பேசினாா். திசையன்விளை வட்டாட்சியா் செல்வகுமாா், சமூக நலத்திட்ட வட்டாட்சியா் பத்மபிரியா, வட்டார வளா்ச்சி அலுவலா் பிளாரன்ஸ் விமலா, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, குமாரபுரம் ஊராட்சித் தலைவா் பிரின்ஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.