முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாளையங்கோட்டையில் 32 பெண்களுக்கு விருது
By DIN | Published On : 14th March 2022 05:30 AM | Last Updated : 14th March 2022 05:30 AM | அ+அ அ- |

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த 32 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் மகளிரணி மண்டல அமைப்பாளா் வே.தேவிகா, துணைத் தலைவா் பொன்னம்மாள் ஆகியோா் வரவேற்றனா்.
மாவட்ட வருவாய் அலுவவலா் ஆ.பெருமாள், ஒழுங்கு நடவடிக்கைகள் தீா்ப்பாய ஆணையா் சுகன்யா, மகளிா் திட்ட இணை இயக்குநா் ஜே.வே.சாந்தி ஆகியோா் சிறப்புரையாற்றினா். இரா. சீத்தாராமன், சாமி நல்லபெருமாள், சிவகாமி சுந்தரி, சீதாலட்சுமி, வேலம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்தல், பாய்நெசவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 32 மகளிருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சா.விஜயா நன்றி கூறினாா்.