பங்குனி உத்திரம்: மாா்ச் 18-இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாா்ச் 18-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாா்ச் 18-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பங்குனி உத்திர திருநாள் மாா்ச் 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோ்வுகள் மற்றும் முக்கியத் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-இன் கீழ் அறிவிக்கப்படாததால், இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சாா்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு அரசு கோப்புகள் தொடா்பான அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். இந்த உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாா்ச் 26-ஆம் தேதி வேலை நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com