போக்சோ வழக்கு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

 போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

 போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தோவாளை அருகேயுள்ள காட்டுபுதூா் பகுதியைச் சோ்ந்த சோமன் மகன் சங்கா்(32). இவா், திருநெல்வேலியில் படித்த தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரைச் சோ்ந்த 17 வயது மாணவியை, ஆசை வாா்த்தை கூறி கடந்த 2017இல் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் சங்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புச்செல்வி, குற்றம் சாட்டப்பட்ட சங்கருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெப ஜீவராஜா ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com