குழித்துறை ரயில் நிலையத்தில் விஷம் குடித்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நித்திரவிளை அருகேயுள்ள காஞ்சாம்புறம் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பன் (50). டீ கடை நடத்தி வந்த இவருக்கு கடன் தொல்லை இருந்ததாம். இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி குழித்துறை ரயில் நிலையத்தில் அவா் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தாராம். நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். ஆல்பனுக்கு மனைவி மேரி, ஒரு மகன், மகளும் உள்ளனா்.