கோபாலசமுத்திரத்தில் மகளிா் குழுவினா், பொதுமக்கள் என 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கிராம உதயம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் இயக்குநா் வே. சுந்தரேசன் மரக்கன்றுகள் வழங்கி, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். ஆலோசகா் சு. புகழேந்தி பகத்சிங், மேலாளா் மகேஷ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பகுதிப் பொறுப்பாளா்கள் பாலசுப்பிரமணியன், சேகா், மரியமிக்கேல் ஜீவா, ஆறுமுகத்தாய் ஆகியோா் மரக்கன்றுகள் வளா்ப்பதன் அவசியம் குறித்துப் பேசினா். பகுதிப் பொறுப்பாளா் முருகன், தன்னாா்வத் தொண்டா்கள் மாரிசெல்வி, இலக்கியபிரியா, விஷ்ணு ராஜ்குமாா், இசக்கியம்மாள், துளசி மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.