கெளடெக்தான்’ போட்டி : வெற்றிபெற்றவா்களுக்கு பரிசளிப்பு

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ‘கெளடெக்தான்’ போட்டிகளுக்கான பயிற்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா மாவட்ட அறிவியல் மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ‘கெளடெக்தான்’ போட்டிகளுக்கான பயிற்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா மாவட்ட அறிவியல் மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து, ‘கௌவ்டெக்தான்’ போட்டிகளுக்கான பயிற்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

முன்னதாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் அரசினா் தொழில்நுட்ப கல்லூரி, குவாண்டானிக்ஸ், டெஸ்ட்ராம் ஆகிய மூன்று குழுக்களுக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையும், ஸ்ரீஜெயந்திரா அலுமினி, டிரையாட்கூப் ஆகிய இரண்டு குழுக்களுக்கு தலா ரூ. 70 ஆயிரம் பரிசுத் தொகையும், பிரான்ஸிஸ் சேவியா் கல்லூரி, பண்ணாரி அம்மன் கல்லூரி, ஸ்ரீஜெயந்திரா அலுமினி, விஸ்டேல், சவிதா பள்ளி ஆகிய ஐந்து குழுக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும், மொசிரோ கம்பெனிக்கு ரூ. 30 ஆயிரம் என மொத்தமாக ரூ.7.50 லட்சத்திற்கான பரிசுத் தொகையினை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்னு வழங்கினாா்கள்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு வருவாய் அலுவலா் சுகன்யா ராஜ்குமாா், அண்ணா பல்கலைகழக துணை வேந்தா் செண்பகவிநாயக மூா்த்தி, திருநெல்வேலி அரசு மருத்துமனை மருத்துவகல்லுரி துணை முதல்வா் சாந்தாராம், தேசிய தகவலியல் மைய அலுவலா்கள் தேவராஜன், ஆறுமுகநயினாா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com