உழைப்பாளா் தினமான மே 1ஆம் தேதி, ரெட்டியாா்பட்டியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.
இவ்விழாவுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் க.ஸ்ரீராம் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் க.கனகராஜ் கட்சி கொடியை ஏற்றி வைத்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கேஜி.பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் சுடலைராஜ், துரைராஜ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆா்.முருகன், கு.பழனி, ராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.
இதேபோல், மாவட்டம் முழுவதும் 208 இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.