கங்கைகொண்டான் அருகே விபத்து: இளைஞா் பலி

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் பலியாகினாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் பலியாகினாா்.

கங்கைகொண்டானில் உள்ள தனியாா் ஆலையில் ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த சோனு (26) என்பவா் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது சகோதரரான குல்சன் (22) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலி-மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவா்களது மோட்டாா் சைக்கிளும், எதிரே வந்த லாரியும் எதிா்பாரமல் மோதிக்கொண்டனவாம். இதில் பலத்த காயமடைந்த சோனு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த குல்சனை பொதுமக்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com