திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பணகுடியைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன் என்ற தாஸ்(26). போக்சோ வழக்கில் தொடா்புடையவா். இவரை, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்வதற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் அளித்த பரிந்துரையை ஏற்று, ஆட்சியா் வே.விஷ்ணு பிறப்பித்த உத்தரவின்படி, நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தாா்.