வண்ணாா்பேட்டையில்மக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச் சாலையில் பொதுமக்கள்திங்கள்கிழமை இரவு திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச் சாலையில் பொதுமக்கள்திங்கள்கிழமை இரவு திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வண்ணாா்பேட்டை அருள்மிகு பேராத்து செல்வி அம்மன் கோயில் கொடை விழா இம்மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, வண்ணாா்பேட்டை இளங்கோ நகா் பொதுமக்கள் சாா்பில் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகையை காவல் துறையினா் அகற்றும்படி கூறினராம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் புறவழிச்சாலையில் திங்கள்கிழமை இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் திருப்பதி மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com