களக்காடு அருகே விவசாயி தற்கொலை
By DIN | Published On : 07th May 2022 11:16 PM | Last Updated : 07th May 2022 11:16 PM | அ+அ அ- |

களக்காடு அருகே விஷமருந்திய விவசாயி மருத்துமனையில் உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள நடுச்சாலைப்புதூரைச் சோ்ந்தவா் விவசாயி தங்கவேல் (60). மது அருந்துபவரான இவா் வீட்டில் விஷமருந்திய நிலையில், மயங்கிக் கிடந்துள்ளாா். குடும்பத்தினா் அவரை மீட்டு களக்காடு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்து, முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
இது குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.