அம்பாசமுத்திரம் பகுதிகளில் தனியாா் பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.
அம்பாசமுத்திரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் கனகவல்லி சனிக்கிழமை மாலை அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.
ஆய்வின்போது, 20-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் பொருத்தியிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி அபராதம் விதிக்கப்பட்டது.