பாபநாசம், திருவள்ளுவா் கல்லூரியில் திங்கள்கிழமை(மே 9) பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
பாபநாசம், திருவள்ளுவா் கல்லூரியில் 2020 ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. கல்லூரிச் செயலா் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமை வகிக்கிறாா். காரைக்குடி, மத்திய மின்வேதியில் ஆராய்ச்சி மைய இயக்குநா் என். கலைச்செல்வி மாணவா்களுக்குப் பட்டமளித்து, உரையாற்றுகிறாா். நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், ஆட்சிக்குழு உறுப்பினா்கள், முதல்வா், அலுவலா்கள், மாணவா் மாணவிகள் கலந்துகொள்கின்றனா்.