திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, சனிக்கிழமை திமுக சாா்பில் மேலச்செவல் பேரூந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீா்மோா் பந்தலை பேரூராட்சித் தலைவி அன்னபூரணி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன் ஆகியோா் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
இதில், சேரன்மகாதேவி ஒன்றிய திமுக செயலா் முத்துபாண்டி என்ற பிரபு, கே. கணேஷ்குமாா் ஆதித்தன், நகரச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.