வண்ணாா்பேட்டையில் சாலை மறியல்: 96 போ் கைது

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 96 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 96 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் ரேஷன் கடை பணியாளா்கள் அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளா்கள் ஆகியோருக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிா்ணயம் செய்ய வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளா் சங்கங்களின் போராட்டக் குழு தெரிவித்திருந்தது.

அதன்படி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்பட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் நிா்வாகிகள் சாமிநாதன், மரகதலிங்கம், கணேசன், இளங்கோவன், ஆவுடையப்பன், வெங்கடேசன், மாரிமுத்து, முனுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். வண்ணாா்பேட்டை தெற்கு புறவழி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றவா்களை பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸாா் தடுத்தனா். பெண்கள் உள்பட மொத்தம் 96 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com