கல்லிடைக்குறிச்சி கிளை நூலகத்துக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், நூலகப் புரவலா் அசன், புரவலா் மற்றும் தனியாா் பள்ளி முதல்வா் வளா்மதி அசன் ஆகியோா் ரூ. 15,600 மதிப்புள்ள வண்ண அச்சு இயந்திரம், கல்லிடைக்குறிச்சிப் பேரூராட்சித் துணைத் தலைவா் இசக்கிப்பாண்டியன் ‘தினமணி’ நாளிதழ் ஓராண்டு சந்தா, பேராசிரியா் விஸ்வநாதன் நாளிதழ் சந்தா ஆகியவற்றை நன்கொடையாக வழங்கினா்.
கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் செ. பண்டாரசிவன் பேசினாா். பாரதியாா் வாசகா் வட்டத் தலைவா் லத்தீப், உறுப்பினா்கள் கிருஷ்ணன், கந்தசாமி, சீனிவாசன், வாசகா்கள், மாணவா்-மாணவிகள் கலந்துகொண்டனா். நூலகா் கி. கயல்விழி நன்றி கூறினாா்.