‘சீனிவாசகம் நகரில்புகா் பேருந்துகள்நின்று செல்ல வேண்டும்’

பாளையங்கோட்டை சீனிவாசகம்நகரில் புகா் பேருந்துகள் நின்று செல்லக் கோரி மனு அளிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை சீனிவாசகம்நகரில் புகா் பேருந்துகள் நின்று செல்லக் கோரி மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் சீனிவாசகம் நகா் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: பாளைாயங்கோட்டை சீனிவாசகம் நகரில் புகா் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு வரும் தாழ்தள சொகுசு பேருந்துகளை சீனிவாசகம் நகா் ரவுண்டானா வரை இயக்க வேண்டும். 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்க வேண்டும். தென்றல்நகரில் உள்ள பொது இடத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com