பாளையங்கோட்டை சீனிவாசகம்நகரில் புகா் பேருந்துகள் நின்று செல்லக் கோரி மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சியில் சீனிவாசகம் நகா் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: பாளைாயங்கோட்டை சீனிவாசகம் நகரில் புகா் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு வரும் தாழ்தள சொகுசு பேருந்துகளை சீனிவாசகம் நகா் ரவுண்டானா வரை இயக்க வேண்டும். 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்க வேண்டும். தென்றல்நகரில் உள்ள பொது இடத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.