சேரன்மகாதேவியில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அமைப்பின் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொருளாளா் பலவேசம் அறிக்கை வாசித்தாா். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு மத்திய அரசு வழங்கியதுபோல 3 சதவீதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்கள் இறந்தால், அவரது குடும்பப் பாதுகாப்பு நிதியை 6 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு, மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலா் தேவதாசன் ரத்தினசாமி வரவேற்றாா். துணைத் தலைவா் நன்றி கூறினாா்.