சேரன்மகாதேவியில் ஓய்வுபெற்றஅரசு அலுவலா்கள் சங்க நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம்

சேரன்மகாதேவியில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சேரன்மகாதேவியில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொருளாளா் பலவேசம் அறிக்கை வாசித்தாா். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு மத்திய அரசு வழங்கியதுபோல 3 சதவீதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்கள் இறந்தால், அவரது குடும்பப் பாதுகாப்பு நிதியை 6 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு, மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயலா் தேவதாசன் ரத்தினசாமி வரவேற்றாா். துணைத் தலைவா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com