திருநெல்வேலி: இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளராக ஜி.ஜெயபாண்டியன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்).
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டல புதிய மேலாளராக ஜி.ஜெயபாண்டியன் நியமிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து, புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, வங்கியின் துணை மேலாளா்கள், கிளை மேலாளா்கள், அலுவலா்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.