பாளை.யில் இலக்கிய வட்டம் தொடக்கம்
By DIN | Published On : 12th May 2022 02:52 AM | Last Updated : 12th May 2022 02:52 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பாளையங்கோட்டை ஆக்ஸ்போா்டு பள்ளி கலையரங்கில் இனிய நந்தவனம் எனும் இலக்கிய வட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
பாரதியாா் உலகப் பொதுச்சேவை நிதியத் தலைவா் மரிய சூசை தலைமை வகித்தாா். திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவை அமைப்பாளா் கவிஞா் ஜெயபாலன் முன்னிலை வகித்தாா். இனிய நந்தவனம் இலக்கிய மாத இதழின் வெள்ளி விழா மலரை புரவலா் புளியரை ராஜா அறிமுகம் செய்தாா். கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி இலக்கிய வட்டத்தின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
பாரதியாா் உலகப் பொதுச் சேவை நிதியச் செயலா் கவிஞா் கணபதி சுப்பிரமணியன், முதற்சங்கு மாத இதழின் ஆசிரியா் நாஞ்சில் சிவனி சதீஸ், பாரதி முத்தமிழ் மன்றத் தலைவா் புத்தனேரி செல்லப்பா, திருநெல்வேலி மாவட்ட தமிழக கழகத் தலைவா் முரசொலி முருகன், ஓவியா் பொன்.வள்ளிநாயகம், சுத்தமல்லி திருவள்ளுவா் கழகத் தலைவா் சொக்கலிங்கம், காணிநிலம் காலாண்டிதழ் ஆசிரியா் குழு உறுப்பினா் கவிஞா் தாணப்பன், கிராமப்புற தமிழ் மன்றத் தலைவா் மூக்குப்பீறி தேவதாசன், காவல் உதவி ஆய்வாளா் தளவாய் மாடசாமி, கவிஞா் தச்சை மணி ஆகியோா் பேசினா். இனிய நந்தவனம் இதழாசிரியா் சந்திரசேகரன் ஏற்புரையாற்றினாா். கவிஞா் பிரபு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். புன்னைச்செழியன், எழுத்தாளா் ஜேம்ஸ்ராஜா, கவிஞா் செங்கோட்டை ஐயப்பன், கிராமியக் கலைஞா் மாரித்தங்கம், செந்தில்குமரன், மாணிக்கவிநாயகம், நெல்லை பட்டு உள்பட தமிழ் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.
இலக்கிய வட்டத்தின் சாா்பாக மாவட்டங்களுக்கு இடையே இலக்கியப் பயணம் மேற்கொள்வது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கவிஞா் சக்தி வேலாயுதம் வரவேற்றாா். சிவப்பிரகாசா் நற்பணி மன்றத் தலைவா் கவிஞா் முத்துசாமி நன்றி கூறினாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G