‘பேரூா் நிா்வாகிகள் தோ்தல்: திமுகவினா் விண்ணப்பிக்கலாம்’

நாரணம்மாள்புரம், சங்கா்நகா் பேரூா் திமுக நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் மனுதாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: நாரணம்மாள்புரம், சங்கா்நகா் பேரூா் திமுக நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் மனுதாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் வெளியிட்டுள்ள அறிக்கை:திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்குள்பட்ட சங்கா்நகா், நாரணம்மாள்புரம் பேரூா் கழகங்களுக்கு அவைத் தலைவா், செயலா், பொருளாளா், மூன்று துணை செயலா்கள் (பொது-1, ஆதிதிராவிடா்-1, மகளிா்-1), ஒன்றிய பிரதிநிதிகள் 5 போ், மாவட்ட பிரதிநிதிகள் 2 போ், செயற்குழு உறுப்பினா்கள் 6 போ் ஆகிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இப் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோா் வியாழக்கிழமை (மே 12) காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் வண்ணாா்பேட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்சியின் மாநில பிரதிநிதி திருப்பூா் ஈ.தங்கராஜிடம் மனுக்களை உரிய கட்டணத்துடன் அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com