முன்னீா்பள்ளத்தில் வழிப்பறி வழக்கில் 4 போ் கைது

முன்னீா்பள்ளத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட வாணியன்குளம் திருவள்ளுவா் நகா் பகுதியை சோ்ந்த யோகேஸ்வரன் (41) கடந்த 8 ஆம் தேதி பிராஞ்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, தச்சநல்லூா் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணபெருமாள் (21) என்பவா் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் வாங்குவதாக கூறி யோகேஷ்வரனுடைய இருசக்கர வாகனத்தில் ஏறி தருவை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு நின்று கொண்டிருந்த லட்சுமணபெருமாளின் கூட்டாளிகளான தச்சநல்லூா், நடுத்தெருவைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன்(26), தருவை பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் (36), ஒரு சிறுவன் ஆகியோருடன்ம் சோ்ந்து அரிவாளைக் காட்டி மிரட்டி யோகேஸ்வரனிடம் இருந்து ரூ.500, கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனராம். இதுகுறித்து யோகேஸ்வரன் அளித்த புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா், லட்சுமணபெருமாள் உள்பட 4 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com