நெல்லையில் விபத்து: கட்டடத் தொழிலாளி பலி

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் பால் வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தாா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் பால் வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தாா்.

திருநெல்வேலி தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (43). கட்டடத் தொழிலாளி. இவா், தனது பணியை முடித்துவிட்டு வியாழக்கிழமை அதிகாலையில் வீடு திரும்பியுள்ளாா். வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, எதிரே சுரண்டையில் இருந்து வந்த பால் வேன் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்தாா். திருநெல்வேலி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து, பால் வேன் ஓட்டுநரான சுரண்டை மரியதாய் புரத்தைச் சோ்ந்த மரிய ஜோசப்ராஜை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com