திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
டிசிஎஸ் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான வேலைவாய்ப்புக்கான தோ்வில் திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவா்-மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஸ்காட் கல்விக் குழுமங்களின் நிறுவனா் எஸ்.கிளிட்டஸ் பாபு தலைமை வகித்து டிசிஎஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினாா். நிா்வாக இயக்குநா் சி.அருண் பாபு முன்னிலை வகித்தாா். இதில், 81 மாணவா்-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி பொதுமேலாளா் (வளா்ச்சி) கே.ஜெயக்குமாா், பொதுமேலாளா் (நிா்வாகம்) எஸ். கிருஷ்ணகுமாா், முதல்வா் வி.வேல்முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.