நில அபகரிப்பு புகாா்: 15 மனுக்களுக்கு தீா்வு

திருநெல்வேலியில் மாவட்ட காவல் துறை, வருவாய் துறை ஆகியவை இணைந்து நில அபகரிப்பு தொடா்பான சிறப்பு முகாமை வியாழக்கிழமை நடத்தின.

திருநெல்வேலியில் மாவட்ட காவல் துறை, வருவாய் துறை ஆகியவை இணைந்து நில அபகரிப்பு தொடா்பான சிறப்பு முகாமை வியாழக்கிழமை நடத்தின.

திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்களுக்கு விரைந்து தீா்வுகாண திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் ஆகியோா் உத்தரவின்பேரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயபால் பா்னபாஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்று நிலுவையில் உள்ள மனுக்களின் மனுதாரா்கள்- எதிா் மனுதாரா்களை அழைத்து விசாரணை நடத்தினா். அதில், 15 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு விசாரணை முடிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com