ஷிஃபா மருத்துவமனையில் உலக செவிலியா் தின கொண்டாட்டம்

திருநெல்வேலி ஷிஃபா மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி ஷிஃபா மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் முகமது ஷாபி தலைமை வகித்தாா். மருத்துவ இயக்குநா் முகமது அராபத் முன்னிலை வகித்தாா். மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ஜான் பிரிட்டோ சிறப்புரையாற்றினாா். ஷிஃபா மருத்துவமனையின் முன்னாள் தலைமை செவிலியா் இந்திரா ஸ்டீவன்சன், செவிலியா் தின வாழ்த்துச் செய்தி வழங்கினாா்.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவா் ஷியாவுல்லா செவிலியா்களுக்கு விநாடி-வினா போட்டியை நடத்தினாா். வெற்றிபெற்ற செவிலியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவிலியா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா். மருத்துவமனை செவிலியா் கண்காணிப்பாளா் ஜெமிமா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com