செங்கோட்டையில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மாலை நேர ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாரத்தலைவா் அய்யப்பன் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் சங்க நிா்வாகி டேனியல் முன்னிலை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் அமுதா வரவேற்றாா்.
வட்டாரச்செயலா் இரவிச்சந்திரன் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகி கோவில்பிச்சை சிறப்புரையாற்றினாா். வட்டார பொறுப்பாளா் செண்பகவல்லி நன்றி கூறினாா்.