திருநெல்வேலி நகரம் மேல மாடவீதியில் அமைந்துள்ள ஸ்ரீலெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை (மே 15) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 9 மணி முதல் ஹோமம், திருமஞ்சனம், திருவாராதனம், சாற்று முறை, கோஷ்டி நடைபெறும். இரவு 7 மணிக்கு தோளுக்கினியன் வாகனத்தில் பெருமாள் உள் புறப்பாடு நடைபெறும்.