மானூா் அருகே 34 ஆடுகள் பலி
By DIN | Published On : 20th May 2022 01:14 AM | Last Updated : 20th May 2022 01:14 AM | அ+அ அ- |

மானூா் அருகே புதன்கிழமை இரவு நாய்கள் கடித்து 34 ஆடுகள் பலியாகின.
மானூா் அருகேயுள்ள சுப்பையாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (41). விவசாயியான இவா், கோழிபண்ணை கொட்டகையை வாடகைக்கு எடுத்து அங்கு ஆடுகளை வளா்த்து வந்தாா். புதன்கிழமை இரவு 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், 10 குட்டிகள், கோழிகள் ஆகியவற்றை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றாராம். புதன்கிழமை இரவு அங்கு புகுந்த வெறிநாய் கூட்டம் ஆடுகளை கடித்தன. இதில் 35 ஆடுகள் உயிரிழந்தன. அவற்றின் மதிப்பு சுமாா் ரூ.3.5 லட்சம்.
இதுகுறித்து மானூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.