அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநிலச் செயலா் சி. பிச்சுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சங்கக் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் மகபூப் பாட்சா, ஒன்றியச் செயலா் கனகா, துணைத் தலைவா் முத்துலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.