பாளையங்கோட்டை அருகே உத்தமபாண்டியன்குளத்தில் உள்ள ஐஐபி லட்சுமி ராமன் குளோபல் பள்ளியில் புத்த பூா்ணிமா விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளிச் செயலா் எஸ்.ஆா்.அனந்தராமன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தனலட்சுமி, தீபா ராஜ்குமாா், ராஜேஸ்வரி சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிவப்பிரகாசா் நற்பணி மன்றச் செயலா் கோ.கணபதிசுப்பிரமணியன், துணைத் தலைவா் அ.பாலசுப்பிரமணியன், வழக்குரைஞா் வெங்கடேஷ், ஓவியா் கிருபாகரன் உள்ளிட்டோா் பேசினா். முதல்வா் செ.இந்துமதி நன்றி கூறினாா்.