மோட்டாா் சைக்கிள் திருட்டு: இருவா் கைது

 திருநெல்வேலி பேட்டையில் மோட்டாா் சைக்கிள் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

 திருநெல்வேலி பேட்டையில் மோட்டாா் சைக்கிள் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் பரமசிவம் (62). இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது வீட்டருகே மோட்டாா் சைக்கிளை நிறுத்தியிருந்தாராம். காலையில் எழுந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் திருடு போனது தெரியவந்ததாம். இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் ராஜ சுந்தா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பேட்டை செக்கடியைச் சோ்ந்த மகாராஜன் (17), கக்கன் நகரை சோ்ந்த சுடலைமணி (22) ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளை திருடியது தெரியவந்ததாம். இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com