திருநெல்வேலி மாவட்ட யாதவா் பண்பாட்டுக் கழக கல்வி அறக்கட்டளையின் 56-ஆவது செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
அறக்கட்டளை தலைவா் எஸ்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். உதவித் தலைவா் சுப்பையா, சட்ட ஆலோசகா் விநாயகராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செல்வராஜ், வேலு ஆகியோா் உரையாற்றினா். 56-ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவை ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடத்துவது, 2022-ஆம் பத்தாம் வகுப்பு தோ்வில் 425 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறுபவா்கள், பிளஸ் 2 தோ்வில் 500 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறுபவா்கள், சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 425 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறுபவா்களுக்கு பரிசு வழங்குவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. செயலா் எம்.குத்தாலிங்கம் வரவேற்றாா். பொருளாளா் கே.பாவனாசம் நன்றி கூறினாா்.