ராதாபுரம் தொகுதியில் ரூ.1.46 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் ரூ.1.46 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் ரூ.1.46 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆவரைகுளத்தில் ரூ.34 லட்சம் செலவில் புதிய கால்நடை மருந்தக கட்டடம், பழவூரில் ரூ.38 லட்சத்தில் வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம், எம்.பி. நிதி ரூ.16 லட்சத்தில் கிளை நூலக கட்டடம் ஆகியவை கட்டுவதற்கான பணிகளுக்கு பேரவைத் தலைவா் அடிக்கல் நாட்டினாா்.

பின்னா் கூடங்குளம் அணுமின்நிலைய சமுதாய முன்னேற்றத் திட்டத்தின் கீழ் சங்கனாபுரம், செட்டிகுளம் ஆரம்ப சுகாதார மையங்களில் ரூ.19.15 லட்சத்திலும், வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.19.30 லட்சத்திலும் காத்திருப்போா் அறை- ஆக்சிஜன் லைன் அமைத்தல் பணிகளை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், சா.ஞானதிரவியம் எம்.பி., வேளாண்மை இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கிருஷ்ணலீலா, வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன், வள்ளியூா் ஒன்றியக் குழுத் தலைவா் சேவியா் செல்வராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com