காா்கள் நேருக்கு நோ் மோதல்: ஒருவா் பலி; 7 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே காா்கள் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 7 போ் காயமடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே காா்கள் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 7 போ் காயமடைந்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கரும்பாட்டூரைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (30). சங்கரன்கோவில் என்ஜிஓ காலனியைச் சோ்ந்தவா் முகேஷ் (46). இவா்கள் இருவரும் திருநெல்வேலியில் பொருள்களை வாங்கிக்கொண்டு புதன்கிழமை நள்ளிரவில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். அதேநேரத்தில் சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் (22), லீசா (23), ரோஷ்லின் (55), செல்வம் (40), திரவியம் (43), எலிசபெத் (65) ஆகிய 6 பேரும் ஒரு காரில் திருநெல்வேலியை நோக்கி வந்துள்ளனா். இவ்விரு காா்களும் மானூா் அருகேயுள்ள அழகியபாண்டியபுரம் பகுதியில் வந்தபோது நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், பலத்த காயமடைந்த 8 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் முகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். மற்ற 7 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது தொடா்பாக மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com