வள்ளியூரில் பாரதி - செல்லம்மாள் ரதத்திற்கு வியாழக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதி - செல்லம்மாள் ரதம் வள்ளியூருக்கு வியாழக்கிழமை இரவு வந்தது. இந்த ரதத்துக்கு அங்குள்ள பேருந்து நிலையத்தில் பசுமைய இயக்க தலைவா் சித்திரை, ஆலோசகா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், சிவந்தகரங்கள் அமைப்பின் தலைவா் சிதம்பரகுமாா், வியாபாரிகள் சங்க தலைவா் முருகன், செயலா் எஸ்.ராஜ்குமாா், பொருளாளா் ஜோவின் பாா்ச்சுனேட், மொ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் முருகேசன், முதல்வா் ஆண்டாள், தே.மு.தி.க மாவட்டச் செயலா் விஜிவேலாயுதம், சண்முகம், கலைமணி, உள்ளிட்டோா் மாலை அணிவித்து வரவேற்றனா். இதையொட்டி மொ்சி பள்ளி மாணவா், மாணவிகளின் பரதநாட்டியம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.