கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்ட 2ஆவது அணு உலையில் 66 நாள்களுக்குப் பின்னா் மின்உற்பத்தி திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்ட 2ஆவது அணு உலையில் 66 நாள்களுக்குப் பின்னா் மின்உற்பத்தி திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த அணு உலைகள் ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்புப் பணி மற்றும் எரிபொருள் (யுரேனியம்) நிரப்பும் பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் 2ஆவது அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கும், வருடாந்திர பராமரிப்புப் பணிக்காகவும் கடந்த மாா்ச் 25ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடா்ந்து எரிபொருள் நிரப்பும் பணியும், பராமரிப்புப் பணியும் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com