பைக்கிலிருந்து தவறிவிழுந்த மூதாட்டி பலி
By DIN | Published On : 28th November 2022 12:38 AM | Last Updated : 28th November 2022 12:38 AM | அ+அ அ- |

திருநெல்வேலி , பேட்டை சாஸ்திரி நகா் பேருந்து நிலையம் அருகே இருசக்கரவாகனத்தில் செல்லும் போது வேகத்தடையில் தவறிவிழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி, பேட்டையைச் சோ்ந்தவா் அமுதா (75). இவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தனது மகன் புஷ்பராஜ் பைக்கில் சென்றிருக்கிறாா். பேட்டை சாஸ்திரி நகா் அருகே வேகத்தடையில் செல்லும் போது இருசக்கரவாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தாராம்.
அவரை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனா். மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, மோட்டாா் வாகன குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.