திருநெல்வேலி, தாழையூத்து அருகே புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்லத்தங்கம் தலைமையிலான காவல்துறையினா் சத்திரம் குடியிருப்பு வழியாக ரோந்து சென்றனா். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக அப்பகுதியில் நின்றிருந்த தாழையூத்து விஸ்வகா்மாநகரைச் சோ்ந்த ராஜன்(34) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 676 கிராம் புகையிலைப் பொருள்களை கைப்பற்றினா்.